24 66063ebaca9d1
இலங்கைசெய்திகள்

கடந்த மாதம் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன்

Share

கடந்த மாதம் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன்

இலங்கையில் 2024 பெப்ரவரி மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நேற்று (28.3.2024) தென்னை அபிவிருத்தி அதிகாரசபை (சி.டி.ஏ) வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரியில் 4,366 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு ரூ. 2,401 மில்லியன் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி மாதாந்த அடிப்படையில் வெளியிட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின்படி, 2024 பெப்ரவரியில் 6,739 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதியின் மூலம் ரூ. 2,971 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப்பாலின் அளவைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டை விட 2024 பெப்ரவரியில் 2,373 மெட்ரிக் தொன்கள் அதிகரித்ததுடன், ஏற்றுமதி வருமானமும் ரூ. 570 மில்லியன் ஆக கூடியுள்ளது.

கடந்த ஆண்டு கடும் வறட்சியை தொடர்ந்து பெய்த மழையால் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை ஒவ்வொரு மாதமும் தேங்காய் உற்பத்தி அதிகளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

இலங்கையில் தேங்காய் உற்பத்தி 2023 நவம்பரில் 22 சதவீதமும், டிசம்பரில் 5 சதவீதமும், 2024 ஜனவரியில் 18 சதவீதமும், பெப்ரவரியில் 25 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், தேங்காய்களின் மொத்த உற்பத்தி 3,000 மில்லியனைத் தாண்டும், மேலும் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட தேங்காய்களின் அளவு 1,380 மில்லியனாக இருக்கும்.

எவ்வாறாயினும், தேங்காய் ஏற்றுமதியின் வருமானம் இந்த வருடத்தில் முதன்முறையாக ஒரு பில்லியன் டொலர்களாக உயரும் என தென்னை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...