24 66340b478b590
இலங்கைசெய்திகள்

தென்னையால் இலங்கைக்கு பாரிய வருமானம்

Share

தென்னையால் இலங்கைக்கு பாரிய வருமானம்

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின்படி, 2024 மார்ச் மாதத்தில் தென்னை தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 19131 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தென்னை தொடர்பான பொருட்கள் மற்றும் ஏற்றுமதியின் வருமானம் தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னை தொடர்பான உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான அறிக்கை விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் (Mahinda Amaraweera) தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெர்னாண்டோவினால் (Roshan Fernando) கையளிக்கப்பட்டது.

அதன்படி, 2024 மார்ச் மாதத்தில் தோட்டக்கலைக்காக இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தென்னை நார் 38,065 மெட்ரிக் தொன் ஆகும். கிடைத்த வருமானம் 5725 மில்லியன் ரூபா. 2023 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகை 29 சதவீத வளர்ச்சியாகும்.

தேங்காய் மட்டைகளிலிருந்து 5,707 மெட்ரிக் தொன் செயற்படுத்தப்பட்ட காபன் ஏற்றுமதி மார்ச் 2024 இல் ரூ.4,430 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 3122 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப்பாலின் அளவு 7,059 மெட்ரிக் தொன். தேங்காய் ஏற்றுமதி மூலம் மார்ச் மாதத்தில் 2,378 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட உலர் தேங்காயின் அளவு 3592 மெட்ரிக் தொன் ஆகும்.

பவுடர் ஆக்கப்பட்ட தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 1,587 மில்லியன் ரூபாவும், தேங்காய் கிரீம் ஏற்றுமதி மூலம் 1,390 மில்லியன் ரூபாவும், தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மூலம் 539 மில்லியன் ரூபாவும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...