24 66340b478b590
இலங்கைசெய்திகள்

தென்னையால் இலங்கைக்கு பாரிய வருமானம்

Share

தென்னையால் இலங்கைக்கு பாரிய வருமானம்

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின்படி, 2024 மார்ச் மாதத்தில் தென்னை தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 19131 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தென்னை தொடர்பான பொருட்கள் மற்றும் ஏற்றுமதியின் வருமானம் தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னை தொடர்பான உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான அறிக்கை விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் (Mahinda Amaraweera) தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெர்னாண்டோவினால் (Roshan Fernando) கையளிக்கப்பட்டது.

அதன்படி, 2024 மார்ச் மாதத்தில் தோட்டக்கலைக்காக இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தென்னை நார் 38,065 மெட்ரிக் தொன் ஆகும். கிடைத்த வருமானம் 5725 மில்லியன் ரூபா. 2023 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகை 29 சதவீத வளர்ச்சியாகும்.

தேங்காய் மட்டைகளிலிருந்து 5,707 மெட்ரிக் தொன் செயற்படுத்தப்பட்ட காபன் ஏற்றுமதி மார்ச் 2024 இல் ரூ.4,430 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 3122 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப்பாலின் அளவு 7,059 மெட்ரிக் தொன். தேங்காய் ஏற்றுமதி மூலம் மார்ச் மாதத்தில் 2,378 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட உலர் தேங்காயின் அளவு 3592 மெட்ரிக் தொன் ஆகும்.

பவுடர் ஆக்கப்பட்ட தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 1,587 மில்லியன் ரூபாவும், தேங்காய் கிரீம் ஏற்றுமதி மூலம் 1,390 மில்லியன் ரூபாவும், தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி மூலம் 539 மில்லியன் ரூபாவும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...