20 2
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்தவின் மனைவியின் நிலைமை கவலைக்கிடம் – மலர் வலையம் அனுப்பிய மர்ம நபர்கள்

Share

கிளப் வசந்தவின் மனைவியின் நிலைமை கவலைக்கிடம் – மலர் வலையம் அனுப்பிய மர்ம நபர்கள்

அத்துருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்தாவின் மனைவி நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கிளப் வசந்தவின் மனைவிக்கு இனந்தெரியாத நபர் மலர் வலையம் ஒன்றை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையை சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டின் போது எட்டு தோட்டாக்கள் அவரது உடலில் பாய்ந்துள்ளதாகவும், அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு, இதுவரை 3 சத்திர சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மனைவி பங்கேற்பார் என குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளமையால் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...