24 66929f5e57109
இலங்கைசெய்திகள்

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள்

Share

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள்

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொக்கு பெட்டி என்ற நபரின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெலிபென்ன, குருந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களின் வீடுகளையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

கிளப் வசந்த மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளை சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவற்றில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் காணப்படவில்லை. அதற்கமைய, சந்தேகநபர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த மற்றும் மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிளப் வசந்தாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜெயரத்ன மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கிளப் வசந்தாவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் பொரளை பொது மயானத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...