24 6694cfa1520a4
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: சிக்கிய பல்கலைக்கழக மாணவி

Share

கிளப் வசந்தவின் சடலம் வைக்கப்பட்டிருந்த பொறளை மலர்சாலைக்கு இரு சந்தர்ப்பங்களில் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்திருந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த தொலைபேசியின் சிம் அட்டை பல்கலைக்கழக மாணவி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.

குறித்த மாணவி பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொலைபேசி இதுவரையில் அச்சுறுத்தல் அழைப்புகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ளது.

குறித்த மாணவி மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், எனினும் அழைப்பு விடுத்த நபர் யார் என்பது பற்றி இதுவரையில் தெரியவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...