6 6
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்த் கொலை சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

Share

கிளப் வசந்த் கொலை சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

கிளப் வசந்த்’ என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1 மில்லியன் ரூபாயை பாதாள உலக நபர்களிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை அடுத்தே, அவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களை எதிர்வரும் ஜுலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1 மில்லியன் ரூபாயை பாதாள உலக நபர்களிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதை அடுத்தே, அவர் உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக,‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா, அதுருகிரியவில் கடந்த திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பிரபல பாடகி கே.சுஜீவாவும் ஒருவராவார்.

வசந்த பெரேரா மற்றும் கே.சுஜீவா ஆகியோர் பச்சை குத்திக் கொள்ளும் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்ற போதே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...