6 6
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்த் கொலை சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

Share

கிளப் வசந்த் கொலை சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

கிளப் வசந்த்’ என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1 மில்லியன் ரூபாயை பாதாள உலக நபர்களிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை அடுத்தே, அவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களை எதிர்வரும் ஜுலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1 மில்லியன் ரூபாயை பாதாள உலக நபர்களிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதை அடுத்தே, அவர் உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக,‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா, அதுருகிரியவில் கடந்த திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பிரபல பாடகி கே.சுஜீவாவும் ஒருவராவார்.

வசந்த பெரேரா மற்றும் கே.சுஜீவா ஆகியோர் பச்சை குத்திக் கொள்ளும் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்ற போதே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...