6 6
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்த் கொலை சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

Share

கிளப் வசந்த் கொலை சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

கிளப் வசந்த்’ என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1 மில்லியன் ரூபாயை பாதாள உலக நபர்களிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை அடுத்தே, அவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களை எதிர்வரும் ஜுலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1 மில்லியன் ரூபாயை பாதாள உலக நபர்களிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதை அடுத்தே, அவர் உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக,‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா, அதுருகிரியவில் கடந்த திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பிரபல பாடகி கே.சுஜீவாவும் ஒருவராவார்.

வசந்த பெரேரா மற்றும் கே.சுஜீவா ஆகியோர் பச்சை குத்திக் கொள்ளும் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்ற போதே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...