tamilni 448 scaled
இலங்கைசெய்திகள்

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

Share

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது சுமார் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1558586293 jaffna university 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை முறையற்றுப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை: பதிவாளர் வி. காண்டீபன் கடும் எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையை (Logo) அனுமதி இன்றி பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அவ்வாறு...

Development officers protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஐந்தாவது நாளாகத் தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

தங்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப்...

cbsn fusion trump says killing in iran is stopping thumbnail
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் போர் அபாயம்: ஈரான் – அமெரிக்கா மோதலைத் தவிர்க்க துருக்கி மற்றும் அரபு நாடுகள் தீவிர முயற்சி!

மத்திய கிழக்கில் ஒரு புதிய போர் வெடிப்பதைத் தவிர்க்கும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே...

25 678c45533b657
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காவல்துறை அதிகாரிகளின் சம்பளம் போதுமானதாக இல்லை: 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்க IG பிரியந்த வீரசூரிய திட்டம்!

காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தற்போதைய சம்பளம், அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு போதுமானதாக இல்லை...