tamilnaadi 86 scaled
இலங்கைசெய்திகள்

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் நகர மேயர் கோரிக்கை

Share

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் நகர மேயர் கோரிக்கை

ஒட்டாவாவின் பார்ஹேவனில் கொல்லப்பட்ட ஆறு இலங்கைப் பிரஜைகளுக்காக நகர மேயர் மார்க் சுட்கிப் நகர மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

நேற்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்காக நகர மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார். இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தின மாகாண நிகழ்வில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நகரின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் தங்களினால் முடிந்த வகையில் ஏதேனும் ஓர் முறையில் உயிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உதவுமாறும் கோரியுள்ளார்.

ஒட்டாவா நகரம் மிகவும் பாதுகாப்பான நகரம் எனவும் இது ஓர் அரிய சம்பவம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் நகர மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார். தந்தையாகவும், நகரின் மேயராகவும் சிறுவர்களின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த நாள் தமக்கு மிகவும் சவால் மிக்க நாளாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளின் தந்தையை நினைத்து வெகுவாக கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

அவருக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்பது தம்ககு தெரியவில்லை என நகர மேயர் தெரிவித்துள்ளார். ஒட்டவாவா இலங்கை சமூகத்தினர் உள்ளிட்ட ஏனைய மக்கள் இந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பரிபூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டமென வலியுறுத்தியுள்ளார்.

நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மௌன அஞ்சலிகள் அல்லது வேறும் வழிகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி நிகழ்வுகளை நடத்துமாறு அவர் நகர மக்களிடம் கோரியுள்ளார்.

அயலவர்கள், குறித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...