24 67008bd5d2159
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு பொலிஸார் அழைப்பாணை

Share

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு பொலிஸார் அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டாரவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நுகேகொடை பெங்கிரிவத்த அருகே அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் இல்லத்தினருகே பொதுமக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்

இதன்போது சிவில் உடையில் இருந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளது

அது தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொள்வதற்காகவே கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டாரவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...