24 67008bd5d2159
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு பொலிஸார் அழைப்பாணை

Share

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு பொலிஸார் அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டாரவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நுகேகொடை பெங்கிரிவத்த அருகே அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் இல்லத்தினருகே பொதுமக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்

இதன்போது சிவில் உடையில் இருந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளது

அது தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொள்வதற்காகவே கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டாரவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...