20 23
இலங்கைசெய்திகள்

வடக்கின் சிவில் சமூக செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை

Share

வடக்கின் சிவில் சமூக செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை

மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த சிவில் சமூக செயற்பாட்டாளரிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

வெகுஜன மக்கள் போராட்டம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யாட்சன் ஃபிகிராடோவிடமே சுமார் ஐந்து மணி நேரம் விசாரணையை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது ரோஹிங்கியாக்களை இலங்கைக்கு வர ஊக்குவிப்பீர்களா? என குற்றப் புலனாய்வு திணைக்களம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அத்தகைய ஊக்குவிப்பை தான் செய்யப்போவது இல்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளதாக யாட்சன் ஃபிகிராடோ குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்களுக்கு என்ன வகையான உதவிகள் வழங்கப்பட்டன? என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாங்கள் பெரிதாக உதவிகள் எதுவும் வழங்கவில்லை. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் எங்கள் கருத்துக்களை வெளியிட்டோம். எங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளை நாங்கள் அவர்களுக்கு முன்னெடுத்திருக்கின்றோம் என அவர் கூறியுள்ளார்.

மேலும், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தினரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சிவில் சமூகத்தை விசாரணைக்கு உட்படுத்துவது மோசமான போக்கு என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யாட்சன் பிகிராடோ ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் மியன்மாரில் இருந்து சுமார் ஒரு இலட்சம் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும், இதுவரை ஒரு அகதி கூட இலங்கைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...