இலங்கைசெய்திகள்

இலங்கையில் சீன பொறியியலாளரின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

Share

இலங்கையில் சீன பொறியியலாளரின் செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

இலங்கை (sri lanka)வெல்லம்பிட்டிய, பிரந்தியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் (china)பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டி காவல்துறையினரும் சிறப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான சீனப் பிரஜை கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட சீன நாட்டவர் 318,000 மில்லிலீட்டர் கோடா மற்றும் 67,500 மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சீன சந்தேக நபர் தாமரை கோபுர திட்டத்தில் பொறியியலாளராகப் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெல்லம்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சீன பிரஜை அளுத்கடே இலக்கம் இரண்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...