2 9
இலங்கைசெய்திகள்

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விடுதி: வெளிநாட்டவர் கைது

Share

பௌர்ணமி விடுமுறை அன்று அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (06) இரவு இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி – காலி வீதியில் அமைந்துள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் பௌர்ணமி விடுமுறையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரவு நேர களியாட்ட விடுதியிலிருந்து மதுபான போத்தல்கள் மற்றும் சட்டவிரோத சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து இரவு நேர களியாட்ட விடுதியின் உயிமையாளரான சீன பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சீன பிரஜையை இன்று செவ்வாய்க்கிழமை (07) நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...