Screenshot 2025 12 02 at 16.09.23
இலங்கைசெய்திகள்

பேரிடரால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் அரச பாதுகாப்பில்: பாதிக்கப்பட்ட சிறுவர் தரவுகளைச் சேகரிக்கும் பணி ஆரம்பம்!

Share

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையினால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த சிறுவர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த சிறுவர்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரை இழந்த சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் பணி மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ‘டித்வா’ சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுகளால் இலங்கையில் 275,000க்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...