24 665f4ed8522f9
இலங்கைசெய்திகள்

மண்மேடு சரிந்து வீழ்ந்து உயிரிழந்த குழந்தை

Share

மண்மேடு சரிந்து வீழ்ந்து உயிரிழந்த குழந்தை

கேகாலை (Kegalle) பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து சிறு குழந்தையொன்று துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது

குறித்த சம்பவத்தில் மூன்று வயது குழந்தையொன்றே இன்று (04) இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் வீட்டின் பின்புறம் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக இன்று காலை வாய்க்கால் ஒன்று வெட்டப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து, குழந்தை வாய்க்காலுக்கு அருகில் சென்ற போது அதற்கு மேல் இருந்த மண் மேடு குழந்தை மீது சரிந்து விழுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் மீது விழுந்த மண்ணை அகற்றி உடனடியாக கேகாலை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள போதும் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...