இலங்கை தற்போது சிக்குன்குனியா வைரஸ் நோய், பாரிய பரவலை எதிர்கொள்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் நாட்டில் வைரஸின் மிக குறிப்பிடத்தக்க மீள் எழுச்சியைக் குறிப்பதாக பிரபல வைரஸ் தொடர்பான பேராசிரியர் நீலிகா மாலவிகே கூறியுள்ளார்.
ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையின்படி(Oxford Nanopore analysis system) இலங்கையில் தற்போது பரவி வரும் திரிபு, தெற்காசியாவின் பிற பகுதிகளில் காணப்படுவதைப் போன்றது என்பதை முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
2025 சிக்குன்குனியா வைரஸ், பொதுவாக ஏடிஸ் அல்போபிக்டஸ் நுளம்பு மூலம் பரவுகிறது.