3 25
இலங்கைசெய்திகள்

முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரனா..! சி.வி.கே. கொடுத்த பதில்

Share

நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே சுமந்திரன் தானே முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகப் பதிலடி கொடுத்துள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சுமந்திரன் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளமை தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று(19) நடத்திய ஊடக சந்திப்பின்போது சிவஞானத்திடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தயவு செய்து இப்போது கதைக்காதீர்கள். ஏனெனில் அது இப்போது மேசையிலும் இல்லை.

குறிப்பாக இந்த வருடம் அந்தத் தேர்தல் நடைபெறாது. ஏனெனில் அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனாலும் மாகாண சபைத் தேர்தல் ஒன்று வருகின்றபோது அதில் நாங்கள் ஒருவரை நிறுத்துவோம்.

மாகாண சபைத் தேர்தல் வரட்டும் பார்ப்போம். இல்லாத ஒன்றுக்கு ஏன் பெயர் வைக்கின்றார்கள். யாரை ஏமாற்றுகின்றார்கள்.

உண்மையில் மாகாண சபை தேர்தல் என்பது நடக்க வேண்டியதுதான். ஆனால் அது நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லாத நிலையில் கூட ஒற்றுமையைக் குலைக்கும் சதி வேலைகள் தற்பொழுதே முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதுதான் சுமந்திரன் தானே முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார்.

எனினும், நடப்பதற்குச் சாத்தியமே இல்லாத மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி கேட்டபோதே சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆகவே, இப்போது அதைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை. அதையே திரும்பத் திரும்பப் பேசி குழப்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...