இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் மிளிரும் சதுரங்க வீர வீராங்கனைகள்

Share
Share

முல்லைத்தீவில் மிளிரும் சதுரங்க வீர வீராங்கனைகள்

சிறிலங்கா சதுரங்க சம்மேளனத்தின் கீழ் நடத்தப்பட்ட தேசிய ஆரம்பநிலை அல்லது புதியவர் பிரிவு (Novice Division) சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகள் அடுத்து சுற்றுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட போட்டி ஒழுங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் கடந்த எட்டு மற்றும் ஒன்பதாம் திகதிகளில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில் 85 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

திறந்த பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டதுடன், திறந்த பிரிவில் 58 பேரும் மகளிர் பிரிவில் 27 பேரும் பங்கேற்றனர்.

முல்லைத்தீவு நகரப் பகுதி, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு விஸ்வமடு, மல்லாவி, மாங்குளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வீர வீராங்கனைகள் இந்த சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றி திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற 25 வீர வீராங்கனைகள் வட மாகாண மட்டத்தில் நடைபெறவுளள மேஜர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

திறந்த பிரிவில் 14 வீர வீராங்கனைகளும் மகளிர் பிரிவில் 11 வீராங்கனைகளும் மேஜர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளுக்கு முல்லைத்திவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் பரிசில்களை வழங்கிவைத்தார்.

முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களும் ஏனைய வீர, வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...