இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் மிளிரும் சதுரங்க வீர வீராங்கனைகள்

Share

முல்லைத்தீவில் மிளிரும் சதுரங்க வீர வீராங்கனைகள்

சிறிலங்கா சதுரங்க சம்மேளனத்தின் கீழ் நடத்தப்பட்ட தேசிய ஆரம்பநிலை அல்லது புதியவர் பிரிவு (Novice Division) சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகள் அடுத்து சுற்றுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட போட்டி ஒழுங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் கடந்த எட்டு மற்றும் ஒன்பதாம் திகதிகளில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில் 85 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

திறந்த பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டதுடன், திறந்த பிரிவில் 58 பேரும் மகளிர் பிரிவில் 27 பேரும் பங்கேற்றனர்.

முல்லைத்தீவு நகரப் பகுதி, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு விஸ்வமடு, மல்லாவி, மாங்குளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வீர வீராங்கனைகள் இந்த சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றி திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற 25 வீர வீராங்கனைகள் வட மாகாண மட்டத்தில் நடைபெறவுளள மேஜர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

திறந்த பிரிவில் 14 வீர வீராங்கனைகளும் மகளிர் பிரிவில் 11 வீராங்கனைகளும் மேஜர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளுக்கு முல்லைத்திவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் பரிசில்களை வழங்கிவைத்தார்.

முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களும் ஏனைய வீர, வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...