16
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி: நிரூபிக்கத்தக்க ஆதாரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவு!

Share

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் – அறிக்கைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் பொலிஸாருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்குமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்றே விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, அந்தப் பகுதியை மனிதப் புதைகுழி என்று கூறுவதானால், அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகைளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி, பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அன்றைய தினம் அந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவும் கட்டளை பிறப்பித்தார்.

இதனிடையே, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்த அகழ்வுப் பணியில் ஓர் எலும்புக்கூடு முழுமையாகவும், மற்றொன்று பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டன. எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியிலேயே இந்த எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் மின் தகன மேடை அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்பு எச்சங்கள் முதன்முறையாக மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...