Murder
இலங்கைசெய்திகள்

மனதை உருக்கிய இன்றைய செம்மணியின் முக்கிய அடையாளம்!

Share

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதுகுழியில் இருந்து இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை மனதை உறுக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்த பொம்மையை போல 1995 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 33 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இரண்டாம் கட்டத்தின் 6ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்றும் தொடர்ந்த நிலையில் மேற்படி சில சிறுவர்களினுடையது என சந்தேகிக்கப்படும் நீல நிற புத்தக பை, அதில் உள்ள சில பொருட்கள் மற்றும் விளையாட்டு பொம்மை என்பன பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

சிறிய பிள்ளையுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட நீல நிற புத்தக பையுடன் காணப்பட்ட மனித எச்சம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினமும் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளதாகவும், இதுவரை 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...