24 660f60e085a6c
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி பணமோசடி

Share

இலங்கையில் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி பணமோசடி

இலங்கையில் ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோரை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நபரின் வங்கிக் கணக்குகளை தடை செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோசடி விசாரணைப் பணியகத்தின் (Fraud Investigation Bureau) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கான நலன்புரிச் சங்கமொன்றை ஆரம்பித்து, அவர்களுக்காக பணத்தைச் சேகரித்து, அந்த பணத்தினை சந்தேகநபர் மோசடி செய்துள்ளார்.

சந்தேகநபர் வாக்குறுதியளித்தபடி நன்மைகளை வழங்காததால், ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோர்கள் அவருக்கு எதிராக மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதற்கமைய, சந்தேகநபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஏற்கனவே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணையில் ரெியவந்துள்ளது.

சந்தேகநபர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...