rtjy 50 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 விவகாரம்: போலிச் செய்தி என அறிவிப்பு

Share

சனல் 4 விவகாரம்: போலிச் செய்தி என அறிவிப்பு

சனல் 4 வீடியோவில் பேசியது போலிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணரும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல ஆய்வுகளையும் ஆய்வுகளையும் செய்துள்ள பேராசிரியருமான ரொஹான் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குற்றவியல் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஆகியவற்றிலிருந்து மாத்திரமின்றி அமெரிக்காவின் FBI மற்றும் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ், இன்டர்போல், வெளிநாடுகளில் இருந்து அதிகாரிகள் மற்றும் இந்த அனைத்து அமைப்புகளினதும் இலங்கை அதிகாரிகளும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

அது மாத்திரமல்ல இலங்கையில் மூன்று தகவல் கோரும் ஆணைக்குழுக்கள் இது தொடர்பாக மூன்று அறிக்கைகளை தற்போது வெளியிட்டுள்ள நிலையில் இந்த விடயங்களைப் பார்க்கும் போது, ​​ சனல் 4 ஊடகத்தில் பேசியது அந்த போலிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம்.

சனல் 4 ஊடகத்தை இலங்கைக்கு அழைத்து சனல் 4ல் இருந்து இதை விசாரித்தவர்களிடம் பேசிவிட்டு இந்த அறிக்கைகளை படித்துவிட்டு சந்தேக நபர்களையும் பேச வைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அப்போது இது இந்த அரசாங்கம் செய்த காரியம் அல்ல. இது நமது ராணுவம் செய்த காரியம் அல்ல. இது அடிப்படைவாத தீவிரவாதம், தீவிரவாதத்தில் இருந்து வன்முறை வந்தது அதிலிருந்து பயங்கரவாதம் வந்ததென கூறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....