tamilni 292 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அப்பட்டமாக பொய் சொல்லும் பொன்சேகா

Share

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அப்பட்டமாக பொய் சொல்லும் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் அப்பட்டமான பொய் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முற்றிலும் ஒருதலைப்பட்சமானது.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களைப் பற்றி அவர் பேசுவதில்லை.

இராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாத இராணுவத் தளபதி அவர்.

அவரது குடல் வெளியே வர குண்டுகள் வீசப்பட்டன. குடல்கள் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன. அவரை வேறு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்படிப்பட்டவர் இன்று தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகிறார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு முற்றிலும் ஒருதலைப்பட்சமானது. அப்போதும் கூறினேன். இன்றும் கூறுகிறேன்.

இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவே இவ்வாறு செய்தார் எனவும் அவரை பாதுகாப்புச் சபைக்கு அழைப்பு விடுக்குமாறும் என்னிடம் கோரிக்கை விடுத்த போதும் நான் அவரை அழைக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாதுகாப்புச் சபையைக் கூட்டுமாறு என்னிடம் கேட்கப்பட்டதாக கூறும் விடயத்தை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...