29
இலங்கைசெய்திகள்

இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இஞ்சி தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரால் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 17, 2020 திகதியிட்ட சிறப்பு வர்த்தமானியின்படி, இஞ்சி இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் உள்நாட்டு பாவனைக்கான உலர் இஞ்சியின் வருடாந்த தேவை 5,167 மெட்ரிக் தொன் என விவசாயத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இஞ்சியின் அளவு வருடத்திற்கு 19,375 மெட்ரிக் தொன்கள் ஆகும்.

இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சந்தையில் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஒரு கிலோ இஞ்சியின் விலை 5,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் இஞ்சி தட்டுப்பாடு காரணமாக விதை இஞ்சியை கூட நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இதன் காரணமாக விதை இஞ்சியை விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சு அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

எனவே அடுத்த ஆண்டு (2025) நாட்டில் உள்ள டொலர் கையிருப்பை பாதுகாக்கும் வகையில் உள்ளுர் கைத்தொழில்களுக்கு தேவையான இஞ்சியை மட்டும் இறக்குமதி செய்வதே பொருத்தமானது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...