tamilni Recovered 2 scaled
இலங்கைசெய்திகள்

சுகாதார அமைச்சின் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்

Share

சுகாதார அமைச்சின் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்

சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் (Minister of Health) பதவி உட்பட அந்த அமைச்சின் பல உயர் பதவிகளில் எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) பதவி விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாத இறுதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) நிரந்தரமாக இணையவுள்ள ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட வைத்தியர் ஜயருவன் பண்டார (Jayaruwan Bandara) மற்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ (Samal Sanjeeva) ஆகியோருக்கு தகைமையின் அடிப்படையில் உரிய பதவிகளை வழங்காத சுகாதார அமைச்சரின் செயற்பாடுகள் குறித்து ஆளும் கட்சியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அத்துடன், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், மருத்துவ விநியோகப் பிரிவு, மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, மருத்துவ பரிசோதனை நிறுவனம் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் பதவிகளிலும் மாற்றம் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...