1 42
இலங்கைசெய்திகள்

ஆசிய பிராந்தியத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்

Share

ஆசிய பிராந்தியத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்

ஆசிய பிராந்தியத்தில் இலங்கையை(sri lanka) தூய்மையான நாடாக மாற்றுவதற்கு உழைத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்தார்.

ஹோமாகம பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

“சுத்தமான இலங்கை”

புதிய திட்டமாக “சுத்தமான இலங்கை” என்ற திட்டத்தை ஆரம்பிக்கிறோம். சுற்றாடல் ரீதியாக தூய்மையான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்திட்டத்திற்காக விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு, தூய்மையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும், இந்நாட்டில் பங்களிக்கக்கூடிய சகலரும், அதற்குப் பங்களிக்கக்கூடிய நிதியத்தை உருவாக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆறு, கால்வாய், கடற்கரை, சாலை, அவென்யூ உட்பட ஒவ்வொரு இடமும் தூய்மைப்படுத்தப்படுகிறது. ஆசிய பிராந்தியத்தில் இலங்கையை தூய்மையான நாடாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம்.

தூய்மையான கழிப்பறை, சுத்தமான பேருந்து நிலையம், தூய்மையான தொடருந்து நிலையம், தூய்மையான தொடருந்து, சுத்தமான பேருந்து, குடிமக்கள் அன்பாகவும் புன்னகையுடனும் நல்ல வரவேற்புடனும் நடத்தப்படும் சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

“சுத்தமான இலங்கை” திட்டமானது சுற்றுப்புறச் சூழல் மட்டுமன்றி அனைத்துத் தரப்பிலிருந்தும் தூய்மையான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...