24 66305bd7cd226
இலங்கைசெய்திகள்

சந்திரிக்கா இழைத்த மிகப் பெரிய தவறு!

Share

சந்திரிக்கா இழைத்த மிகப் பெரிய தவறு!

2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை வேட்பாளராக முன்னிறுத்தியமை தான் வாழ்நாளில் செய்த வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க(Chandrika Kumaratuna) மனவேதனைப்பட்டுள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் திங்கட்கிழமை காலை (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தனது மனவேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நாங்கள் நாட்டுக்காக அரசியல் செய்பவர்கள். தற்போதுள்ள அரசியல்வாதிகளுடன் எனக்கு அரசியல் செய்ய முடியாது. கட்சியின் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு என்னிடம் பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நான் மறுத்து விட்டேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெடுப்ப என்னால் முடியும் நான் ஆதரவு வழங்குவேன் அவ்வளவுதான்.

கட்சியை உடனடியாக பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. நீண்ட காலம் எடுக்கும். கட்சியை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான ஆதரவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Sripala De Silva) வழங்குவார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு உதவி புரியவே சந்திரிக்கா வந்துள்ளார் என தற்போது பெரிய பொய்யொன்றை கூறுகின்றனர். எனக்கு அப்படி எந்தவொரு ஆசையும் இல்லை. நான் எப்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காகவே பணியாற்றுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...