இலங்கைசெய்திகள்

இரு முன்னாள் ஜனாதிபதிகளும் சஜித்தும் பொதுக் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை

Share
25 19
Share

இரு முன்னாள் ஜனாதிபதிகளும் சஜித்தும் பொதுக் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து பொதுக் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து இந்த கூட்டணி அமைக்கப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு இல்லத்தில் இது குறித்த சந்திபொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நிட்டம்புவ பகுதியில் வைத்து சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து நேற்றைய தினம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...