24 6686b16847ceeddddddddddddddd
இலங்கைசெய்திகள்

ரணில் போன்றோரின் பொய் கதைகளை நம்ப வேண்டாம்: சந்திரசேகரன் சாடல்

Share

ரணில் போன்றோரின் பொய் கதைகளை நம்ப வேண்டாம்: சந்திரசேகரன் சாடல்

அதிபர் தேர்தலை எவரும் பிற்போட முடியாது எனவும் எதிர்வரும் ஒக்டோபர், செப்டம்பர் மாதங்கள் இடையே அதிபர் தேர்தல் நடைபெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழில் (Jaffna) இன்று (4.7.2024) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “ரணிலின் நரித்தனம் இனி எடுபடாது. மக்கள் இவ்வாறானவர்களின் பொய் கதையை நம்ப வேண்டாம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை ஒத்திவைப்பதாக முட்டி போட்டார்.

அது உடனேயே உடைந்துவிட்டது. தற்போது அதிபரின் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து ஒரு முட்டி போடப்பட்டுள்ளது. அதுவும் உடைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்கவே (Anura Kumara Dissanayaka) வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...