rtjy 72 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 காணொளிக்கு எதிராக கொழும்பு வீதிகளில் போராட்டம்

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல்-4 ஊடகம் வெளியிட்ட ஆவணப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சனல்-4வின் சதியை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று(07.09.20230 இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருந்ததாக சனல்-4 ஊடகம் வெளியிட்ட ஆவணப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த ஆவணப்பதிவை எதிர்த்து இன்று தேசியத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்திற்கான இயக்கத்தால் அமைதி ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

கடும் மழைக்கு மத்தியிலும் இயக்கத்தின் உறுப்பினர்கள், பிக்குகள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தை போஷிக்காதே, சனல்-4க்கு எதிராக எழுந்திரு, சனல்-4வின் சதியை தோற்படிப்போம், நல்லிணக்கத்தை பிரித்தானியா வெறுக்கிறாதா? உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதன் போது, பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக தமது அமைப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவில்லை எனவும் சனல்-4 ஊடகத்தின் நடவடிக்கைகளை மாத்திரம் எதிர்ப்பதாகவும் இயக்கத்தின் உறுப்பினரான உடுகல்லே ஸ்ரீ ஜின்னாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...