24 66148545808b4
இலங்கைசெய்திகள்

60 வயதை கடந்த 57 பேர் நாடாளுமன்றில் அங்கம்

Share

60 வயதை கடந்த 57 பேர் நாடாளுமன்றில் அங்கம்

இலங்கையில் 60 வயது முதல் 90 வயது வரையிலான வயதுகளை உடைய 57 பேர் நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranavaka) தெரிவித்துள்ளார்.

எனினும், நாற்பது வயதுக்கும் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 26 மட்டுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளைஞர், யுவதிகள் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடக்கூடிய பின்னணியை உருவாக்குதல் காலத்தின் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

வயது முதிர்ந்தவர்கள் இந்த சூழ்நிலையை இளையோருக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்ல பகுதியில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் காணப்படுவதாகவும் இதனையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2Fa5gVbadaZHsNNRaO5GvG 1
செய்திகள்அரசியல்இலங்கை

தரம் 06 கல்வி மறுசீரமைப்பு 2027 வரை ஒத்திவைப்பு: ஆசிரியர் சங்கங்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி அறிவிப்பு!

ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையின் கீழ், 06 ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்களை 2027 ஆம்...

Best Fuel Cards for Small Businesses
செய்திகள்அரசியல்இலங்கை

அரச வாகனங்களுக்கு இனி டிஜிட்டல் கார்டு: முறைகேடுகளைத் தவிர்க்க அமைச்சரவை அதிரடி அனுமதி!

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், புதிய...

1768301444 WIMAL 6
செய்திகள்அரசியல்இலங்கை

விமல் வீரவன்சவின் போராட்டம் வெற்றி: தரம் 6 கல்விச் சீர்திருத்தங்களை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு!

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக...

images 7 3
உலகம்செய்திகள்

ஈரானில் இரத்தக்களரியாகும் போராட்டங்கள்: 2,000 பேர் உயிரிழப்பு; முதல்முறையாக ஒப்புக்கொண்டது அரசு!

ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில், உயிரிழந்தவர்களின்...