அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை!

21 618bd279d3466

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியாவில் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களையும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் பார்வையிடச் சென்றிருந்தபோதே ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சில ஆசிரியர்களின் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளதால், அரசாங்க ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசேடமாக நுவரெலியாவில் உள்ள ஆசிரியர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீடுகள் இன்றித் தவிக்கும் ஆசிரியர்களுக்கு விசேட நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் தான் கோரிக்கை விடுப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

Exit mobile version