23 8
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு விமான சேவையில் புதிய திட்டங்களுடன் தயாராகும் சினமன் எயார்

Share

உள்நாட்டு விமான சேவையில் புதிய திட்டங்களுடன் தயாராகும் சினமன் எயார்

இலங்கையின் உள்நாட்டு விமான சேவையான சினமன் எயார், கண்டி மற்றும் சிகிரியா தொடக்கம் தென் கரையோர பிரதேசங்களான, கொக்கல மற்றும் ஹம்பாந்தோட்டையுடன் இணைக்கும் விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

இரண்டு புதிய தினசரி திட்டமிடப்பட்ட விமான சேவைகளை குறித்த நிறுவனம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சேவையில் செஸ்னா 208 விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் நவம்பரில் இருந்நு இந்த விமானசேவை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானங்கள் 2024 நவம்பர் 01 இல் இருந்து 2025 ஏப்ரல் 30ஆம் வரை செயற்படவுள்ளன.

குளிர்கால விடுமுறைக் காலத்தில் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாசார முக்கோணம் அல்லது மத்திய மலை நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் இலங்கையின் தென் கரையோரத்தை பார்க்க விரும்புவோருக்கு, பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் இந்த உள்நாட்டு விமான சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள், தண்ணீரில் இருந்து புறப்படுவதை உள்ளடக்கிய தனித்துவமான பயண அனுபவத்தையும் வழங்குவதாக சினமன் எயார் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...