24 65ff78d2611dd
இலங்கைசெய்திகள்

அடுத்த மாதம் முதல் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்

Share

அடுத்த மாதம் முதல் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்

மத்திய வங்கியின் சம்பளத் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய வங்கி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மத்திய வங்கியின் சம்பள திருத்தத்தை மீளாய்வு செய்வதற்கு உடனடியாக குழுவொன்று நியமிக்கப்பட்டு சம்பள அதிகரிப்பு ஒத்திவைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்க சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கைக்கு 4 வார கால அவகாசம் வழங்குவதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும், மத்திய வங்கியில் திருத்தம் செய்யாமல் இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் கூறியுள்ளார்.

அதன்படி, அடுத்த மாதம் முதல் தீர்வு கிடைக்கும் வரை பழைய ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பொறுப்புக்கூறலின் கீழ் நாடாளுமன்ற நிதிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள மத்திய வங்கி இணங்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...