இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு

Share

இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் ! மத்திய வங்கியின் அறிவிப்பு

இவ்வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையானது, ஆடை ஏற்றுமதி மூலம் 1843.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த வருடத்தின் ஜனவரியிலிருந்து, மே மாதம் வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில், இவ்ருமானம் 16.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில், இலங்கையானது ஆடை ஏற்றுமதி மூலம் 2206.6 மில்லியன் அமெரிக்க டொலர்கைள வருமானமாக பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார பின்னடைவே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை கடந்த வருடத்தில் முதல் 5 மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.1 வீத வருமானக் குறைப்பு காட்டுவதுடன் ஏனைய முழுமையாக தைத்த ஆடைகள்; மூலம்கிடைக்கும் வருமானம் 19 வீதமாகவும் குறைவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....