rtjy 46 scaled
இலங்கைசெய்திகள்

கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்த மத்திய வங்கி

Share

கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்த மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியால் கோடிக்கணக்கான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் (23.85 கோடி) நாணயத்தாள்களை கடந்த ஆண்டு மத்திய வங்கி அழித்துள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022இல் அழிக்கப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 207.3 பில்லியன் ரூபா (20730 கோடி ரூபா) என தெரியவந்துள்ளது.

நாட்டில் சிதைக்கப்படாத மற்றும் தரமான நாணயத்தாள்களின் புழக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி அவ்வப்போது சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை அழித்து வருகிறது.

மத்திய வங்கி 2021இல் 108.2 மில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயத்தாள்களை அழித்ததுடன் அதன் பெறுமதி 44.3 பில்லியன் ரூபாவாகும்.

இதேவேளை 2020ஆம் ஆண்டில் 127.3 மில்லியன் மதிப்பிழந்த நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுமதி 62.2 பில்லியன் ரூபாவாகும்.

மேலும், 2019ஆம் ஆண்டில், 139.8 பில்லியன் ரூபா பெறுமதியான 235 மில்லியன் நாணயத்தாள்கள் மத்திய வங்கியினால் அழிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...