rtjy 46 scaled
இலங்கைசெய்திகள்

கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்த மத்திய வங்கி

Share

கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்த மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியால் கோடிக்கணக்கான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் (23.85 கோடி) நாணயத்தாள்களை கடந்த ஆண்டு மத்திய வங்கி அழித்துள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022இல் அழிக்கப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 207.3 பில்லியன் ரூபா (20730 கோடி ரூபா) என தெரியவந்துள்ளது.

நாட்டில் சிதைக்கப்படாத மற்றும் தரமான நாணயத்தாள்களின் புழக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி அவ்வப்போது சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை அழித்து வருகிறது.

மத்திய வங்கி 2021இல் 108.2 மில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயத்தாள்களை அழித்ததுடன் அதன் பெறுமதி 44.3 பில்லியன் ரூபாவாகும்.

இதேவேளை 2020ஆம் ஆண்டில் 127.3 மில்லியன் மதிப்பிழந்த நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுமதி 62.2 பில்லியன் ரூபாவாகும்.

மேலும், 2019ஆம் ஆண்டில், 139.8 பில்லியன் ரூபா பெறுமதியான 235 மில்லியன் நாணயத்தாள்கள் மத்திய வங்கியினால் அழிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
630209254 1394929386009820 5806761785805560613 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

SLTB வரலாற்றில் புதிய அத்தியாயம்: 19 பெண் நடத்துனர்கள் நிரந்தரப் பணியில் நியமனம்!

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் (SLTB) வரலாற்றில் முதல் முறையாக, 19 பெண் நடத்துனர்கள் உத்தியோகபூர்வமாகத் தனது...

1770471523 cricket bat attack
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞர் படுகொலை: ரத்மலானையில் பயங்கரம்!

இரத்மலானை, தர்மாராம வீதிப் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதில் 21...

images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...