rtjy 46 scaled
இலங்கைசெய்திகள்

கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்த மத்திய வங்கி

Share

கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்த மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியால் கோடிக்கணக்கான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் (23.85 கோடி) நாணயத்தாள்களை கடந்த ஆண்டு மத்திய வங்கி அழித்துள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022இல் அழிக்கப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 207.3 பில்லியன் ரூபா (20730 கோடி ரூபா) என தெரியவந்துள்ளது.

நாட்டில் சிதைக்கப்படாத மற்றும் தரமான நாணயத்தாள்களின் புழக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி அவ்வப்போது சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை அழித்து வருகிறது.

மத்திய வங்கி 2021இல் 108.2 மில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயத்தாள்களை அழித்ததுடன் அதன் பெறுமதி 44.3 பில்லியன் ரூபாவாகும்.

இதேவேளை 2020ஆம் ஆண்டில் 127.3 மில்லியன் மதிப்பிழந்த நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுமதி 62.2 பில்லியன் ரூபாவாகும்.

மேலும், 2019ஆம் ஆண்டில், 139.8 பில்லியன் ரூபா பெறுமதியான 235 மில்லியன் நாணயத்தாள்கள் மத்திய வங்கியினால் அழிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...