மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்

Share

மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள்

இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வட்டி வீதங்கள் ஒரே நேரத்தில் செயற்படுத்தப்படுவதால் வங்கி வைப்புக்கள் தொடர்பில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தக வங்கியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​இலங்கை மத்திய வங்கியால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கொள்கை வட்டி விகிதங்கள் வங்கி வைப்புகளுக்கு 11 சதவீதம் மற்றும் கடன்களுக்கு 12 சதவீதமாகும்.

இந்த வட்டி விகிதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி கட்டாயப்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும்,நாட்டின் பாதுகாப்பான வைப்புத் தொகையாகக் கருதப்படும் திறைசேரி உண்டியல்கள் மீது 20 சதவீத வட்டியை மத்திய வங்கி செலுத்துகிறது.

இதன் காரணமாக வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வைப்புத்தொகையை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வங்கி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி வட்டி தொடர்பில் மத்திய வங்கி இரண்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் 19 சதவீத வட்டி விகிதத்தில் கூட திறைசேரி உண்டியல்களை தேவையான தொகைக்கு விற்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் நாட்டின் வங்கி வட்டி விகிதங்கள் கண்டிப்பாக அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சில தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர வட்டி விகிதங்கள் 22 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...