இலங்கை மின்சார சபையைக் (CEB) கலைப்பதற்கான திகதியை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 24 தொழிற்சங்கங்கள் அதிரடியாக எச்சரித்துள்ளன.
ஊழியர்களின் 8 முக்கிய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை சாதகமான பதில் வழங்காத நிலையில், பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் இந்தப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். இந்தத் திடீர் போராட்டத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.