tamilnaadi 16 scaled
இலங்கைசெய்திகள்

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கும் அபாயம்

Share

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் தற்பொழுது மின்சாரக்கட்டணம் குறைக்கப்படும் சாத்தியமில்லை என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

புதிய மின்சார சக்தி சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் நீக்கப்படாவிட்டால், மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார சக்தி சட்ட மூலம் தொடர்பில் இரண்டு தடவைகள் எழுத்து மூல பரிந்துரை முன்வைக்கப்பட்ட போதிலும் அந்த பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் உதாசீனம் செய்து, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றின் அனுமதியுடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கள் ஏற்படும் என பராக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...