23 12
இலங்கைசெய்திகள்

ஆட்டம் காணும் தமிழரசுக்கட்சி மத்தியகுழு – அதிரடியாக வழக்கு தாக்கல்

Share

ஆட்டம் காணும் தமிழரசுக்கட்சி மத்தியகுழு – அதிரடியாக வழக்கு தாக்கல்

கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றை பிறக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சி.சிவமோகன் (C.Sivamohan) வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஊடாக யாழ். நீதிமன்றில் நேற்றயதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் (Ilankai Tamil Arasu Kachch) மத்தியகுழு கூட்டம் கடந்த 14 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது கட்சியின் தலைவர் யார் என்ற விடயத்தில் குழப்பநிலை ஏற்ப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி அதனை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழரசுக்கட்சியின் யாப்பு விதிமுறைகளை மீறி மத்தியகுழு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும், தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் யாழ். நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கட்சியின் கொள்கைகளை வகுப்பதும், செயற்திட்டங்களை வகுப்பதும் கட்சியின் பரிபாலனமும், தலைவர் தெரிவும் பொதுச்சபையின் ஆணைக்கு உட்பட்டவை என்று தமிழரசுக்கட்சியின் யாப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ளதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...