1 1
இலங்கைசெய்திகள்

இவர்தான் தலைவர்: அனுரகுமாரவை புகழ்ந்துள்ள கர்தினால்

Share

அரசியல்வாதிகள் கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகள் மூலம் மக்களை அடக்கக்கூடாது, மாறாக மக்களை மென்மையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(Malcolm Ranjith) கோரியுள்ளார்.

அதேநேரம், அரசியல்வாதிகள் மக்களிடையே கலந்து, அனைத்து இன மற்றும் மதக் குழுக்களையும் ஒருவருக்கொருவர் நேசிக்க வைக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கம்பஹாவில் இன்று(1) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

கோபத்துடனும் வெறுப்புடனும் நீண்ட போர் நடத்தப்பட்டது, ஆனால் இப்போது ஒருவருக்கொருவர் நேசிக்க வேண்டிய நேரம் இதுவாகும் கர்தினால் ரஞ்சித் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று வடக்கிற்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாணத்தில் மக்கள் அவரை எவ்வாறு அரவணைத்தார்கள் என்பதை காணக்கூடியதாக இருந்தது.

இதன் மூலம் தெற்குடன் சமரசம் செய்ய வடக்கில் உள்ள மக்களிடையே மிகுந்த விருப்பம் இருப்பதைக் காணமுடிந்தது.

இந்தநிலையில், ஒரு தலைவர் மக்களிடையே எவ்வாறு சென்று அவர்களை மென்மையுடன் அரவணைக்க வேண்டும் என்பதைக் காட்டியதன் மூலம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்ற அரசியல் தலைவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார் என்றும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...