1 1
இலங்கைசெய்திகள்

இவர்தான் தலைவர்: அனுரகுமாரவை புகழ்ந்துள்ள கர்தினால்

Share

அரசியல்வாதிகள் கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகள் மூலம் மக்களை அடக்கக்கூடாது, மாறாக மக்களை மென்மையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(Malcolm Ranjith) கோரியுள்ளார்.

அதேநேரம், அரசியல்வாதிகள் மக்களிடையே கலந்து, அனைத்து இன மற்றும் மதக் குழுக்களையும் ஒருவருக்கொருவர் நேசிக்க வைக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கம்பஹாவில் இன்று(1) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

கோபத்துடனும் வெறுப்புடனும் நீண்ட போர் நடத்தப்பட்டது, ஆனால் இப்போது ஒருவருக்கொருவர் நேசிக்க வேண்டிய நேரம் இதுவாகும் கர்தினால் ரஞ்சித் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று வடக்கிற்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாணத்தில் மக்கள் அவரை எவ்வாறு அரவணைத்தார்கள் என்பதை காணக்கூடியதாக இருந்தது.

இதன் மூலம் தெற்குடன் சமரசம் செய்ய வடக்கில் உள்ள மக்களிடையே மிகுந்த விருப்பம் இருப்பதைக் காணமுடிந்தது.

இந்தநிலையில், ஒரு தலைவர் மக்களிடையே எவ்வாறு சென்று அவர்களை மென்மையுடன் அரவணைக்க வேண்டும் என்பதைக் காட்டியதன் மூலம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்ற அரசியல் தலைவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார் என்றும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...