1 27
இலங்கைசெய்திகள்

கொழும்பில் பிரபல ஹோட்டல்களில் குவிந்துள்ள வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள்

Share

கொழும்பில் பிரபல ஹோட்டல்களில் குவிந்துள்ள வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள்

ஜனாதிபதி தேர்தலி்ல் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் 53 இலட்சம் வாக்குகளையும் இரண்டாவது இடத்தை பெறும் வேட்பாளர் 45 இலட்சம் வாக்குகளையும் பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்படி, இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நான்கு பிரதான வேட்பாளர்கள் 50 வீதத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அது மிகவும் கடினமான நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, ​​போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் நாட்டின் பிரதான வேட்பாளர் ஒருவருக்கு உதவுவதாகவும், அவர்கள் தண்ணீர் மற்றும் உணவுப் பொதிகளை விநியோகிக்க பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

நாளை 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் பிரதான வேட்பாளர்கள் இருவர் மற்றும் அமைச்சர்கள் பலர் தமது மனைவி மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்களில் தங்குவதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...