tamilni 235 scaled
இலங்கைசெய்திகள்

தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதி

Share

தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதி

தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதியின் மூலம் சுமார் நான்கு பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மார்பகப் புற்று நோய்க்காக பயன்படுத்தப்படும் மருந்து வகையே இவ்வாறு மோசடியாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் தேசிய ஔடதங்கள் அதிகாரசபையின் வழமையான நடைமுறைகளக்கு புறம்பான வகையில் மருந்துப் பொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மார்பகப் புற்று நோய்கக்காக பயன்படுத்தப்படும் மருந்து வகைக்கு நிகரான எனினும் தரம் குறைந்த மருந்து வகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

அப்போதைய சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரட்ன, அப்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவர் லால் ஜயகொடி உள்ளிட்ட சிலருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...

MediaFile 3 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் உறைபனி மற்றும் குளு குளு காலநிலை: விடுமுறை தினத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

மலையகத்தின் வசந்தபுரி என அழைக்கப்படும் நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட மற்றும் இதமான காலநிலை...