10 7
இலங்கைசெய்திகள்

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடியர்கள் : வெளியான பின்னணி

Share

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடியர்கள் : வெளியான பின்னணி

அமெரிக்க (United States) பொருட்களை கொள்வனவு செய்வதனை கனடியர்கள் தவிர்த்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ( Donald Trump) கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதனை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான தங்களது தீர்மானங்களில் மாற்றம் செய்ய நேரிடும் என கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய கனடியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...