24 663e58341853e
இலங்கைசெய்திகள்

யாழில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பூங்கா: கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு!

Share

யாழில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் பூங்கா: கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறையில் 500 மில்லியன் டொலர் பெறுமதியான கைத்தொழில் பூங்காவை (Industrial Park) நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.

கனடாவில் (Canada) உள்ள இலங்கையர்களுடன் இந்த நடவடிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் அரச சீமெந்து தொழிற்சாலை உள்ள 700 ஏக்கர் காணியில் இந்த கைத்தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முதலீட்டாளர்கள் சுமார் 500 மில்லியின் டொலர்களை வழங்கவுள்ளனர்.

கனடாவில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தொழில்முனைவோர் கைத்தொழில் பூங்காவை அமைப்பதற்கான பாதை மற்றும் பிற உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மேற்கொள்வார்கள்.

இந்த பூங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்ப்பதன் மூலம் அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...