24 65fcff0d4c80b
இலங்கைசெய்திகள்

இலங்கையர்கள் படுகொலை விவகாரம்: கனடிய ஊடகங்களை பாராட்டிய ஹரீன்

Share

இலங்கையர்கள் படுகொலை விவகாரம்: கனடிய ஊடகங்களை பாராட்டிய ஹரீன்

கனடாவில் இயங்கி வரும் ஊடகங்கள் மிகவும் ஒழுக்கநெறியுடன் செயற்பட்டு வருவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக் குடும்பம் ஒன்று கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

கூரிய ஆயுதங்களின் மூலம் 19 வயதான இலங்கை இளைஞரின் தாக்குதலுக்கு இலக்காகி இவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது கனடிய ஊடகங்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை பிரச்சாரம் செய்து குடும்பங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது ஒரேயொரு குடும்ப புகைப்படம் மட்டுமே சில ஊடகங்கள் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் இடம்பெற்றிருந்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அம்பலப்படுத்தி அவர்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஊடக ஒழுக்கநெறி மீறல்களை வரையறுக்கும் நோக்கில் அரசாங்கம் இணைய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகம் செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க பாலியல் குற்றச் செயல் சர்ச்சையில் சிக்கிய போதும் அந்நாட்டு ஊடகங்களில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் பற்றிய புகைப்படங்களை வெளியிடவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...