articles2Fy4vlsuAHR6AX2UIg2KXs
இலங்கைசெய்திகள்

இரத்த சோகை மற்றும் தலசீமியா சிகிச்சைக்கு 5.4 இலட்சம் டெஸ்ஃபெரிஒக்சமின் ஊசி மருந்து கொள்முதல்: அமைச்சரவை அனுமதி! 

Share

குருதியை உறையச் செய்யும் இரத்தச் சோகை (Blood Anemia) மற்றும் தலசீமியா (Thalassemia) நோயாளர்களின் உடலிலிருந்து மேலதிக இரும்பை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசி மருந்து பிபீ 500 மில்லிக்கிராம் (500mg) ஊசிமருந்துக் குப்பிகள் 540,000 விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வியாழக்கிழமை (டிசம்பர் 11) இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்முதலுக்காக சர்வதேசப் போட்டியில் விலைமுறிகள் கோரப்பட்டதில், இரண்டு விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரேயொரு விலைமனுதாரரான இலங்கையின் ABC Pharma Services நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெறுகையை 791.1 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்காகச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6kbj9SMxjiNxACRUcSNi
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி கோரி ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் கடிதம்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக...

weather warning 1
இலங்கைசெய்திகள்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றும் மழை நீடிக்கும்: திணைக்களம் அறிவிப்பு!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (டிசம்பர் 12) அவ்வப்போது...

advance leval
இலங்கைசெய்திகள்

தரம் 12 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத்...

25 69341965c01f0
இலங்கைசெய்திகள்

நவம்பர் புயல்கள் தீவிரமடைய காலநிலை மாற்றமே காரணம்: ஆராய்ச்சியாளர்கள் குழு அறிக்கை!

இலங்கை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தி...