குருதியை உறையச் செய்யும் இரத்தச் சோகை (Blood Anemia) மற்றும் தலசீமியா (Thalassemia) நோயாளர்களின் உடலிலிருந்து மேலதிக இரும்பை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசி மருந்து பிபீ 500 மில்லிக்கிராம் (500mg) ஊசிமருந்துக் குப்பிகள் 540,000 விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வியாழக்கிழமை (டிசம்பர் 11) இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்முதலுக்காக சர்வதேசப் போட்டியில் விலைமுறிகள் கோரப்பட்டதில், இரண்டு விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரேயொரு விலைமனுதாரரான இலங்கையின் ABC Pharma Services நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெறுகையை 791.1 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்காகச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.